தேடி தான் பிடிப்போமே

நடந்து செல்லும்
பள்ளி சிறுவனை
என் பைக் யில் விட்ட போது
"ரொம்ப நன்றி அண்ணே !!!"
என்று கேட்ட போது
மனம் கனத்துப் போனது ......
வழக்கமாக செல்லும்
பேருந்தில் ''பர்ஸ் "ஐ
மறந்து விட்ட நாளில்
"இருக்கட்டும் சார்..,
நாளைக்கு தாங்க சார் "
என்று கேட்ட போது
மனம் கனத்துப் போனது ......

அம்மா வயதிருக்கும்
முதியோருக்கு ஒரு
வேளை உணவு வாங்கி
கொடுத்த போது ...
"தம்பி..,நீங்க குழந்தை
குட்டிகளோட ..நல்லா
இருக்கனும் "
என்று கேட்ட போது
மனம் கனத்துப் போனது ......

பிடித்து போன ஒன்று ......


"மறதி ...,
பிடித்து போன ஒன்று ......!!!

காவி சாயங்களை
எத்தனை முறை
வெளுத்தாலும் ...
மறந்து போனதால்
மறதி பிடித்து போனது .....,,,!!!!

கார்க்கில்
சிலருக்கு ..மீளாதுயரம்
சிலருக்கு ..நாட்டுப்பற்று
சிலருக்கு ...வரவு ..
சிலருக்கு ...வாழ்க்கை
மறக்க நினைப்பதால்
மறதி பிடித்து போனது .....,!!!

அண்மைய செய்திகள்