கவிதை

"அவள் அன்றே சொன்னாள்
     எனக்கு தெரிந்த எல்லாம்
  உனக்கும் தெரிய வேண்டும் என்று
     இன்று தான் எனக்கு புரிந்தது
  அவளுக்கு மறக்க தெரியும் என்று "
 
"மலர துடிக்கும் மொட்டுக்கு தெரியாது
  மலர்ந்தால் மரணம் என்று "

தேடி தான் பிடிப்போமே

நடந்து செல்லும்
பள்ளி சிறுவனை
என் பைக் யில் விட்ட போது
"ரொம்ப நன்றி அண்ணே !!!"
என்று கேட்ட போது
மனம் கனத்துப் போனது ......
வழக்கமாக செல்லும்
பேருந்தில் ''பர்ஸ் "ஐ
மறந்து விட்ட நாளில்
"இருக்கட்டும் சார்..,
நாளைக்கு தாங்க சார் "
என்று கேட்ட போது
மனம் கனத்துப் போனது ......

அம்மா வயதிருக்கும்
முதியோருக்கு ஒரு
வேளை உணவு வாங்கி
கொடுத்த போது ...
"தம்பி..,நீங்க குழந்தை
குட்டிகளோட ..நல்லா
இருக்கனும் "
என்று கேட்ட போது
மனம் கனத்துப் போனது ......

அண்மைய செய்திகள்