மனம் மகிழுங்கள்
நமது மனது எப்படி இருக்கிறதோ அப்படித்தான் அது உலகத்தை உணர்கிறது. மனது உலகத்தை எப்படி உணர்கிறதோ அப்படித்தான் உலகம் நம்மைப் பிரதிபலிக்கிறது.
குழப்புகிறதோ?
ரொம்ப சிம்பிள்.
நீங்கள் உற்சாகமாய், “குட் மூடில்“ இருக்கிறீர்கள் என்றால் நீங்களும் மற்றவர்களிடம் அன்பாய், இனிமையாய், நகைச் சுவையாய்ப் பேசுவீர்கள்.. பதிலுக்கு அவர்களும் உங்களிடம் அப்படியே பிரதிபலிப்பர். நீங்கள் சிரித்து நண்பரின் முதுகைத் தட்டினால் அவர் கத்தி எடுத்துக் கொண்டு உங்களைக் குத்த வரப்போவதில்லை. பதிலுக்கு அவரும் சிரித்தாக வேண்டும். உலகமே அன்று உங்களுக்கு மகிழ்ச்சியாய், இனிதாய்த் தோன்றும்.
யாரிடம்.., புகார் கொடுக்க உன்னைப் பற்றி?
கடமை ..,
நாட்டு உடைமை
ஆகாத வார்த்தை ...
காலம் தவறி
வரும் அரசு பேருந்து,,
தவறாமல் மீதி தராத
நடத்துனர்...,
அரசு மருத்துவமனையில்..
கடைசியாய் நுழையும்
பொதுநல மருத்துவர் ..,
வரிசைக்கும் காசு,
வாங்கும் கம்பவுண்டர்....
ஒவ்வொரு முறையும்
வாக்கு தரும் வேட்பாளர் ..
வாக்கு தவறினாலும்
அவருக்கே வாக்கு
போடும் வாக்களர்கள்...!!!!
நாட்டு உடைமை
ஆகாத வார்த்தை ...
காலம் தவறி
வரும் அரசு பேருந்து,,
தவறாமல் மீதி தராத
நடத்துனர்...,
அரசு மருத்துவமனையில்..
கடைசியாய் நுழையும்
பொதுநல மருத்துவர் ..,
வரிசைக்கும் காசு,
வாங்கும் கம்பவுண்டர்....
ஒவ்வொரு முறையும்
வாக்கு தரும் வேட்பாளர் ..
வாக்கு தவறினாலும்
அவருக்கே வாக்கு
போடும் வாக்களர்கள்...!!!!
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)