பிடித்து போன ஒன்று ......


"மறதி ...,
பிடித்து போன ஒன்று ......!!!

காவி சாயங்களை
எத்தனை முறை
வெளுத்தாலும் ...
மறந்து போனதால்
மறதி பிடித்து போனது .....,,,!!!!

கார்க்கில்
சிலருக்கு ..மீளாதுயரம்
சிலருக்கு ..நாட்டுப்பற்று
சிலருக்கு ...வரவு ..
சிலருக்கு ...வாழ்க்கை
மறக்க நினைப்பதால்
மறதி பிடித்து போனது .....,!!!
 '2G ' அலைவரிசை ..
என்னவென்ற தெரியவில்லை ..
என் போன்ற பாமரனுக்கு
தெரிந்தவனும் ..எதிர்க்கவில்லை ..
எப்படியும் மறந்து
போய்விடும் என்பதால் ..
மறதி பிடித்து போனது .....,!!

விளையாட்டு கற்று
தந்தது ...
'குழு ஒற்றுமை '..
'போராட்டம் '
'நொடிகளின் அருமை '
'பணம் புரட்டும் ...
மறுபக்கம் ....' -மறுபடியும்
நினைவு படுத்த
விரும்பாதாதல் ..
மறதி பிடித்து போனது .....,

பலவற்றை ..எழுத
நினைத்தும் ..சிலவற்றை
மறந்ததால்...
சில சமயங்களில் ...
இந்த மறதி ..கூட
பிடித்து தான் போகுகிறது ,,,
என்னை போல் .
பலருக்கும் ...."
---சு .அப்துல் ஹக்கீம் ...,திருநெல்வேலி ...

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

அண்மைய செய்திகள்